Home இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடு செல்வோருக்கு புதிய அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடு செல்வோருக்கு புதிய அறிவிப்பு

0
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடு செல்வோருக்கு புதிய அறிவிப்பு

வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் கடந்த வாரம் முதல் இடைநிறுத்தப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த நாட்களில் இடம்பெற்று வந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்பட்டமையால் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முதல் மீளவும் வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here