பிந்திய செய்திகள்

03 மணித்தியால வாக்கு மூலத்தை பெற்ற குற்றப் புலனாய்வுப் பிரிவு

முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குல் சம்பவம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டும் என, அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தமைக்கு அமைய இன்றையதினம் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் மூன்று மணிநேரம் வாக்குமூலமொன்றை வழங்கினார்.

கடந்த டிசம்பர் 10ஆம் திகதி செய்யப்பட்ட இந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த, குற்றப்புலானாய்வு பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கருத்து மற்றும் ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறும், சட்டநடவடிக்கை எடுக்குமாறும் தாம் கோரியுள்ளதாக அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடங்களை குறிப்பிட்டார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts