இன்று (18)வெள்ளிக்கிழமை அதிகாலை கண்டியிலிருந்து பதுளையை நோக்கி புறப்பட்ட சரக்கு புகையிரதம் ஒன்று வட்டவளை ரொசல்லை பகுதியில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த புகையிரதம் கண்டியிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த புகையிரம் கண்டி – பதுளை பிரதான புகையிரத பாதையில் ரொசல்லை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் காலை 7.00 மணியளவில் தடம்புரண்டுள்ளது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/2304c96d-e52e-4839-ade6-8675ed6135d6/22-620f572e286ad.webp)
இதனால் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த புகையிரதத்தில் பதுளை நோக்கி பயணித்த பயணிகளும் சிரமங்களுக்கு உட்பட்டுள்ளனர்.
குறித்த புகையிரம் தடம் புரண்டதன் காரணமாக புகையிரத சமிக்ஞை கட்டுப்பாட்டு தொகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.
![Gallery](https://cdn.ibcstack.com/article/2304c96d-e52e-4839-ade6-8675ed6135d6/22-620f572e286ad.webp)
குறித்த புகையிரதத்தினை தண்டவாளங்களில் அமர்த்துவதற்காக நாவலபிட்டியிலிருந்து திருத்து குழுவினர் வருகை தந்துள்ளனர். எனவே மிக விரைவில் புகையிரத சேவை வழமைக்கு திரும்பவுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/ff4d77d5-2880-4c7d-8d73-46a8b9b46a1e/22-620f572d86fc6.webp)