Home இலங்கை வவுனியாவில் கைது செய்யப்பட்ட 20 வயது இளைஞன்

வவுனியாவில் கைது செய்யப்பட்ட 20 வயது இளைஞன்

0
வவுனியாவில் கைது செய்யப்பட்ட 20 வயது இளைஞன்

வவுனியா,குருமன்காடு நகரசபை விடுதியில் உள்ள வீடு ஒன்றில் அண்மையில் 3 பவுண் நகை திருடப்பட்டிருந்தது. அத்துடன் வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலும் 2 பவுண் நகை திருடப்பட்டிருந்தது. இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி ஐ.ஏ.ஏ.எஸ்.ஜயக்கொடி வழிகாட்டலில் உப காவல்துறை பரிசோதகர் கியான் தலைமையில் காவல்துறையைச் சேர்ந்த (37348) திஸாநாயக்க, (61461) திலீப், (36099) விக்கிரமசூரிய, (91792) தயாளன் உள்ளடங்கிய குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனைடிப்படையில் திருட்டு சம்பவம் தொடர்பில் வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இளைஞரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here