பிந்திய செய்திகள்

மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லாவிடில் ஜனாதிபதி வீட்டை முற்றுகையிடுவோம் -எச்சரித்த பாராளுமன்ற உறுப்பினர்!

வடபகுதி மீனவர் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காணத் தவறினால் ஜனாதிபதி அலுவலகம் அல்லது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று நடைபெற்ற மீனவர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, யாழ்ப்பாணத்தில் இன்று கொழும்பில் மீனவர்கள் போராட்டம். மீனவர்களின் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் துணை நிற்கும் என்பதை நான் கூற விரும்புகிறேன்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறம்பட செயற்பட முடியாவிட்டால் பதவி விலக வேண்டும் என நான் பலமுறை கூறி வந்துள்ளேன். மேலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கையின்மையால் இன்று இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

அவரது செயற்பாடுகள் தமிழ்நாட்டு மக்களின் மீதான தமிழர்களின் அனுதாபத்தை மாற்றும் நோக்கில் அமைந்துள்ளன. அரசின் கைக்கூலியாக இருப்பதை விடுத்து, மீனவர் பிரச்னைகளுக்கு தீர்வு காண பாடுபட வேண்டும்.

அப்படி தீர்வு காண அரசு தவறினால் போராட்டத்தின் வடிவம் மாறும். குறிப்பாக ஜனாதிபதி அலுவலகம் அல்லது ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிடுவது போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts