Home இலங்கை இரவு நேர மின்வெட்டு வார இறுதி நாட்களில் இல்லை!

இரவு நேர மின்வெட்டு வார இறுதி நாட்களில் இல்லை!

0
இரவு நேர மின்வெட்டு வார இறுதி நாட்களில் இல்லை!

வார இறுதி நாட்களில் இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைய இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாட்டுத் திணைக்களத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளைய தினம் (26) ஏ.பீ.சி குழுக்களுக்கு பகல் நேர மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ள நிலையில் அது 3 மணித்தியாலங்காக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், ஏனைய குழுக்களுக்கு இரண்டரை மணித்தியாலங்கள் குறித்த காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 27 ஆம் திகதி ஏ.பீ.சி குழுக்களை தவிர ஏனைய குழுக்களுக்கு எவ்வித மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படாது எனவும், ஏ,பீ.சி குழுக்களுக்கு இரண்டரை மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here