Home இலங்கை பூநகரியில் பாரிய விபத்து-24வயது பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

பூநகரியில் பாரிய விபத்து-24வயது பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

0
பூநகரியில் பாரிய விபத்து-24வயது பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் விபத்தில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விபத்து சம்பவத்தில் திருகோணமலை காந்திபுரத்தை சேர்ந்த 24 வயதான பொலிஸ் கொஸ்தாபலான கணேசரட்ணம் ஹரிகரன் என்பவரே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.

மன்னாரில் பணி புரியும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பணி நிமித்தம் காரணமாக யாழ்ப்பாணம் வந்து விட்டு, மன்னார் நோக்கி திரும்பும் வேளை பூநகரி – சங்குப்பிட்டி பாலம் கடந்து சற்று தொலைவில், இராணுவ சோதனை சாவடிக்கு அருகில் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்தது வீதியோர கட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.

அதில் இருவரும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மற்றையவரை வீதியில் சென்றவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here