பிந்திய செய்திகள்

13 பேரை பலியெடுத்த மொனராகலை எல்லவல அருவி

குறுகிய காலப்பகுதிக்குள் அருவியில் குளிக்கச் சென்ற 13 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.

குறித்த மரணங்கள் மொனராகலை வெல்லவாய பகுதியிலுள்ள எல்லவல அருவியில் குளிக்கச் சென்ற இளம் வயதினருக்கு இடம்பெற்றுள்ளதாக வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் ஆர்.டி. ஹரமானிஸ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு குளிப்பதற்கு தடைவிதித்து அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளதுடன், வேலியும் அமைக்கப்பட்டு குறித்த இடத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் இது குறித்து தெரிவிக்கையில்,

கடந்த முதலாம் திகதி அருவியைப் பார்க்கச் சென்றபோது அங்கு குளித்த பல்கலைக்கழக மாணவர் மற்றும் பாடசாலை மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு அங்கு செல்லத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் அக்கரைபற்று பிரதேசத்தை சேர்ந்த ஏழு பேர் மற்றும், காலியைச் சேர்ந்த மூன்று பேர் அருவியில் குளிக்க சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 21 வயதான அப்துல் ஹசீஸ் கயாசி, 22 வயதான அமீம் றிசார்ட் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஹசீஸ் உயர்தரம் படித்து வரும் மாணவர் என்பதுடன் றிசார்ட் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவனுமாகும்.

இதனைப் பொருட்படுத்தாது அருவியில் குளிக்க சென்றதால், இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இளம் உயிர்களே பலியாகி வருகின்றன. அதன்படி இதுவரையில் 13 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் வரை அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவும் தெரிவித்துள்ளனர் .

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts