Home இலங்கை முள்ளிவாய்க்கால் மாணவன் யாழ் பல்கலைக்கழகத்தில் உயரிய விருது

முள்ளிவாய்க்கால் மாணவன் யாழ் பல்கலைக்கழகத்தில் உயரிய விருது

0
முள்ளிவாய்க்கால் மாணவன் யாழ் பல்கலைக்கழகத்தில் உயரிய விருது

யேசுரட்ணம் சிறி என்ற மாணவனுக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது அணியின் சகலதுறை ஆட்டநாயகனாக தெரிவுசெய்து கௌரவிக்கப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்கால் மாணவன் யாழ் பல்கலைக்கழகத்தில் உயரிய விருது

முல்லை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் பிறந்து வளர்ந்து பல்கலைக்கழகத்திற்க தெரிவாக ஊடகத்துறையில் பட்டம் பெற்ற யேசுரட்ணம் சிறி என்ற மாணவனுக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது அணியின் சகலதுறை ஆட்டநாயகனாக தெரிவுசெய்து கௌரவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை மாணவன் சிறி 2014 ஆம் 2015 ஆம் ஆண்டுகளில் சகலதுறைகளிலும் சிறப்பாக செயற்பட்ட மாணவன் என யாழ்பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் உயரிய விருதாகிய பேராசிரியர் அ.துரைராஜா விருதான தங்கப்பதக்கத்தினை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு நிகழ்வு நடைபெற்று வருகின்றது இதன்போது சகலதுறைகளிலும் சிறப்பாக செயற்பட்ட மாணவன் என முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மண்ணின் ஊடகத்துறை மாணவன் யோகரட்ணம் சிறி பெற்றுள்ளமை முல்லைத்தீவு மண்ணிற்கு பெருமைசேர்த்துள்ளது.
இவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here