Home இலங்கை பேருந்தை மறித்து சாரதியின் மூக்கை வெட்டி நபர் தப்பி ஓட்டம்

பேருந்தை மறித்து சாரதியின் மூக்கை வெட்டி நபர் தப்பி ஓட்டம்

0
பேருந்தை மறித்து சாரதியின் மூக்கை வெட்டி நபர் தப்பி ஓட்டம்

நேற்று (08)யாழ் – பருத்தித்துறை வீதியில் இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த தனியார் பேருந்தினை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வீதியில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.

அதனை அடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here