பிந்திய செய்திகள்

யாழ் பாடசாலை ஆசிரியர் அதிரடிக் கைது!

தென்மராட்சி பிரதேசத்தில் யாழ், பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனின் உறவினர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர், சிகிச்சையின் பின்னர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மீசாலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரே மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டார்.

13 வயதான பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாக ஆசிரியர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை சிறுவனை வீட்டிற்கு அழைத்து பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக மாணவனின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிறுவனின் குடும்பத்தினர், ஆசிரியரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த ஆசிரியர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிறுவனும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வீடு புகுந்து தன் மீது தாக்குதல் நடத்தியதாக ஆசிரியரும், சிறுவனின் குடும்பத்தினர் மீது முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுவனின் முறைப்பாட்டின் அடிப்படையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர், இன்று ஆசிரியரை சாவகச்சேரி பொலிசார் கைது செய்தனர்.

எனினும், தன் மீதான குற்றச்சாட்டை ஆசிரியர் மறுத்துள்ளார். மாணவன் நாளை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்.

ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறுவனின் தாயார் உள்ளிட்ட சில குடும்ப உறுப்பினர்களை பொலிசார் தேடி வருகிறார்கள். அவர்கள் தமைறைவாகி விட்டனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts