பிந்திய செய்திகள்

கொழும்பு குடியிருப்பு பகுதியில் 21 வீடுகள் தீ பிடித்து எரிந்துள்ளது

நேற்றிரவு 12.30 அளவில் கொழும்பு – தொட்டலங்க – கஜிமாவத்தை குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் முற்றாக எரிந்து சேத மாகியுள்ளன.

இந்நிலையில் தீ பரவிய தகவல் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்டதையடுத்து, குறித்த பகுதிக்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts