பிந்திய செய்திகள்

இலங்கையில் பிரதான விற்பனைப் பொருட்களாக 2 பொருட்கள் விலை உயர்வு

சிற்றுணவகங்களில் நாட்டில் எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக, உணவுப் பொதியின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்ட நிலையில் , வடை மற்றும் தேநீரின் விற்பனை அதிகரித்துள்ளதாக, சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சந்தையில், முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளமையால், உணவுப் பொதியின் விலை மேலும் உயர்வடைந்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அதன்படி கோழி இறைச்சி உணவுப் பொதியின் விலை 300 ரூபாயாகவும், மீன் உணவுப் பொதியின் விலை 250 ரூபாயாகவும், முட்டை உணவுப் பொதியின் விலை 240 ரூபாயாகவும், மரக்கறி உணவுப் பொதியின் விலை 220 ரூபாயாகவும் அதிகரித்துள்ளன.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts