Home இலங்கை சிறுவர்களின் சுகாதார நிலைமை தொடர்பில் எச்சரிகை

சிறுவர்களின் சுகாதார நிலைமை தொடர்பில் எச்சரிகை

0
சிறுவர்களின் சுகாதார நிலைமை தொடர்பில் எச்சரிகை

இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் மருத்துவ சிகிச்சையை நாடும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு காய்ச்சலால் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளதால், அதிகளவில் தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும் என்றார்.

குளிப்பதைக் கட்டுப்படுத்துவதால் வியர்வை கொப்புளங்கள் அதிகரிக்கலாம் எனவும் அதனால் இருமல், சளி எதுவாக இருந்தாலும் குழந்தைகளைக் குளிப்பாட்டுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக, குழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாட அதிக நேரம் கொடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here