முல்லைத்தீவு – முறிகண்டி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
![May be an image of 1 person and beard](https://scontent.fcmb3-2.fna.fbcdn.net/v/t39.30808-6/277167675_3233699976876746_8646985771414786814_n.jpg?_nc_cat=109&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=fqRIsPQpanMAX94mTwl&_nc_ht=scontent.fcmb3-2.fna&oh=00_AT8Z2FAvmA99nN0pMb_068dboTZagLw8wyHA2aT8khOIEA&oe=6248FE90)
குறித்த சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளதுமுறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த கழிவகற்றும் உழவு இயந்திரத்தின் பின் பகுதியில் அதே திசையில் பயணித்த சொகுசு பேருந்து மோதியுள்ளது.
![முறிகண்டி பகுதியில் விபத்து: புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஊழியர் பலி - மூவர் படுகாயம். முறிகண்டி பகுதியில் விபத்து: புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஊழியர் பலி - மூவர் படுகாயம்.](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0nTNNFcwnZX8qm4IpaqTMqvoMwiqvkx247gk_L2pvQBrpiGyQ6qH3qz1MmnTGI0sMgT12TzabSp5f4dAVmgPol_2lOfFRHY4ZyGq6j2n72YobWhxnCBOG2v9TxCkhwA5d7DQ5i6rMmhGQSNKJZdII5Y3WwS9g6J13IxdUb0V1eu2_MptgRLnaGW_hiA/w640-h360/FB_IMG_1648636638606.jpg)
விபத்தில் உழவு இயந்திரம் பலத்த சேதங்களுக்குள்ளாகித் தடம்புரண்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரத்தைச் செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
![முறிகண்டி பகுதியில் விபத்து: புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஊழியர் பலி - மூவர் படுகாயம். முறிகண்டி பகுதியில் விபத்து: புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஊழியர் பலி - மூவர் படுகாயம்.](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioeWl8_hZcuKMALqObw9g654B8mKivJt7ITHzBD2VETmZc8N0I8L_y8xtGQwFxDMioCHQ5oJ-U8vjBvclBboXvo4bjH3D2saSCpFZhIv-HzV--VBcxi0_34MQD7pQLEFRI_zbgkE6nMP_dewqF9nHq3J8rJY59E2u3vPn3Ol7L20OIofSv_z5XA63czg/w640-h360/FB_IMG_1648638627062.jpg)
குறித்த விபத்தில் கறிப்பட்டமுறிப்பு பகுதியைச் சேர்த்த 35 வயதுடைய ஜெயராம் பிரசாத் என்ற இளம் குடும்பஸ்தரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் சாரதியாக பணிக்கமர்த்தப்பட்டுள்ள அதேவேளை படுகாயம் அடைந்த மற்றைய மூவரும் சுகாதார சிற்றூழியர்களாவர்.
![முறிகண்டி பகுதியில் விபத்து: புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஊழியர் பலி - மூவர் படுகாயம். முறிகண்டி பகுதியில் விபத்து: புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஊழியர் பலி - மூவர் படுகாயம்.](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdQiixGGP5LIT-4PICdiWDvUCpf8cphm81drm47qLNTDhd2q-UWz0r7XWvlqNNFjHeQwQ6Lem2uUPprbhqX0N2bwggpKQpqsRebfZay_RjJOUNwIkCLI1TpgbFnGAuU1Y_Ys1JSC_JVt4RGYiU9kT9y1svJkS1xs4DumJol2PehFDBvwn3_pkUVP6qhw/w640-h360/FB_IMG_1648638625270.jpg)
படுகாயமடைந்த மூவரும் அவசர அழைப்பு நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
![முறிகண்டி பகுதியில் விபத்து: புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஊழியர் பலி - மூவர் படுகாயம். முறிகண்டி பகுதியில் விபத்து: புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஊழியர் பலி - மூவர் படுகாயம்.](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpy-SYUfiL3R_Z9mHpZNCfKQtULM853D9iIb9-HRPcRlH7alJreeUNm8YSJIUTmMw4nu_ZIn8NKPkERI27IaLg_GLNQGKCjkJjiL65KfWmMVJeRoy1lA8Ci4RoKKIqote7_eUcnD1TteyF7Pc35ps_ZDc-VXdNbk4qSc8PlGGQB4HK7raq6Y4pJcsh0w/w640-h360/FB_IMG_1648638622705.jpg)
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.