பிந்திய செய்திகள்

ஓட்டுசுட்டானில் மரக்கடத்தலை பிடிக்கசென்ற சென்ற பொலிசார்- கடிகாயங்களுடன் வைத்தியசாலையில்

நேற்று முன்தினம்(08) மாலை முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய இத்திமடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்க மரங்கள் அறுக்கப்படுவதாக ஒட்டுசுட்டான் பொலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்றபொலீசார் சட்டவிரோதமான முறையில் தேக்கமரங்கள் அறுத்துக்கொண்டிருந்தவர்களை சுற்றிளைத்துள்ளார்கள்.

பலர் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி கணவனை கைதுசெய்த பொலீசார் மீது கடித்துள்ளார்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கணவன் தப்பி ஓடிய நிலையில் பொலீசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை,பொலீசார் மீது கடித்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மரக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடி காயங்களுக்கு உள்ளான பொலீஸ் உத்தியோகத்தர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts