பிந்திய செய்திகள்

எரிபொருட்களுடன் கைப்பற்றப்பட்டுள்ள 4 தாங்கிகள்

கம்பஹா பமுனுகம, போபிட்டியவில் அமைந்துள்ள வாகன சேவை நிலைய வளாகத்துக்குள் 17,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு தாங்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட தாங்கிகளில் இரண்டு டீசல் தாங்கிகள், ஒரு பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் தாங்கிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் முறையே 8,800 லீற்றர் டீசல், 4,000 லீற்றர் பெற்றோல் மற்றும் 5,000 லீற்றர் மண்ணெண்ணெய் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை வத்தளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் அனுமதி பெற்ற இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்தும் ஒருவருக்கு சொந்தமானவை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தொடர்பான வழக்கு இன்று வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இருப்பினும் நாட்டின் பல்வேறு இடங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts