யாழ் மாவட்டத்தில் வெறிச்சோடிக் காணப்பட்ட பாடசாலைகள்!

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் அதிபர், அசிரியர் சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் வெறிச்சோடிக் காணப்பட்டன.

நாட்டின் பொருளாதார நெருக்கடி, மற்றும் ஆசிரியர்,மாணவர் போக்குவரத்திற்கு தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் இன்று இடம் பெறுகிறது.

இந்நிலையில் யாழ்.மாவட்டதில் பெரும்பாலான பாடசாலை களில் ஆசிரியர் வரவு மிக குறைவாக காணப்பட்டதுடன் மாணவர்கள் வரவும் குறைவாக காணப்பட்டதால் இதன் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்ததுடன் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.

Gallery
Gallery
Gallery