பிந்திய செய்திகள்

முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலம் மீட்பு ‘

நேற்றைய தினம் (03) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம், மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதுடைய கே.பிரதீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் கடற்றொழில் நடவடிக்கைக்காக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts