பிந்திய செய்திகள்

வீடொன்றில் இருந்து இரு பெண்களின் சடலம் மீட்பு

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இருந்து வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவர் 76 வயதுடைய எனவும், மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் உயிரிழந்தாகவும், மற்றொருவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts