இலங்கையில் டொலர் தட்டுப்பாடு காரணமாக சைக்கிள் ஒன்றின் விலை 100 சதவீதம் வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி பெண்கள் பயன்படுத்தும் சைக்கிள் மற்றும் சைக்கிளின் விலை 18,000 ரூபாயிலிருந்து 36,000 வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து வாகனங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் சைக்கிளின் விலையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













































