Home இலங்கை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகளின் சடலங்கள்

உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகளின் சடலங்கள்

0
உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட தந்தை மற்றும் மகளின் சடலங்கள்

வீடொன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் நேற்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுத்துறை, ஹீனடியங்கல சிசில உயன பகுதியைச் சேர்ந்த 69 வயதான சமரசிங்க சுனில் ஜயசிங்க மற்றும் அவரது 33 வயது மகள் சசித்ரா ஹன்சமலி ஜயசிங்க ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

தந்தை நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையிலும், மகள் அறையின் தரையில் சடலமாக கிடந்ததாகவும் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here