பிந்திய செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 7 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை 7 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை இரவு 10.00 மணிமுதல் நாளை மறுதினம் அதிகாலை 5 மணிவரை நீர்விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

அதன்படி, எத்துல்கோட்டே, பத்தேகம, மிரிஹானை, மாதிவெல, உடஹாமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொடை, பாகொட – விஜேராம ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts