Home Blog Page 234

யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த 4வயது சிறுமி!!

இன்று(25)காலை உடல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுமி சுகவீனம் காரணமாக யாழ் சங்கானை பிரதேச வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சுவாச பிரச்சினை காரணமாகக் குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியைச் சேர்ந்த ரஷ்மிகா என்ற 4 வயது நிரம்பிய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வரையறுக்கபட்ட நெல்லிற்கான கொள்வனவு விலை!

0

நாட்டில் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்கான நிலையான விலையினை அரசாங்கம் நிர்ணயித்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு ,இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அதன்படி வெளியாகியுள்ள சில அமைச்சரவை முடிவுகள்,

  • 2020-2021 பெரும்போகத்தில் விளைச்சல் குறைந்து பாதிப்புகளை எதிர்நோக்கும் விவசாயிகளின் வருமானத்தை பாதுகாக்க 1கிலோ நெல்லுக்கு ரூ. 25 வீதம் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40,000 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
  • பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள 450 சுகாதார நிலையங்களில் முதற்கட்டமாக 59 சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
  • இன்று முதல் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை ஊடாக ஒரு கிலோ நெல் தலா 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும்.

தொலைபேசிக்காக மாணவி மீது கத்திக்குத்து நடாத்திய 23 இளைஞன் கைது…!

0

காலி லபுதுவப் பகுதியில் மாணவி ஒருவரை கத்தியால் குத்திவிட்டு,அவரிடமிருந்து தொலைபேசியை பறித்துச்சென்ற நபர் ஒருவரை அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் கல்விகற்கும் மாணவியே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வயது 23 எனவும்,அவர் தனமல்வில பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த மாணவி தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். அதேவேளை குறித்த மாணவியும் தனமல்வில பகுதியில் வசித்து வருபவர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைதான சந்தேக நபரை இன்றைய தினம் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கட்டுத்துவக்குவெடித்து குடும்பஸ்தர் படுகாயம்-முல்லைத்தீவில் சம்பவம்

24.01.2022 நேற்று முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயலுக்கு செல்லும்போது கட்டுத்துவக்கு வெடித்துள்ளது இதன்போது 48 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் காலில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுப்டுள்ளார்.

சம்வம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலீசார் மேற்கொண்டுவருகின்றார்கள்

விரைவில் விற்பனைக்கு வரும் விலை குறைந்த ரெட்மி ஸ்மார்ட்போன்கள்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் மிட்-ரேன்ஜ் பிரிவில் உருவாகி வருகிறது. இவற்றில் 50 எம்.பி. பிரைமரி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமரா லென்ஸ்கள் வழங்கப்பட இருக்கின்றன.

இத்துடன் புது ரெட்மி ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் பிராசஸர் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ரெடட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

இதுகுறித்து சியோமியு.ஐ. வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி ஸ்மார்ட்போன் மாடல்களை சியோமி விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 12 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 14 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ரெட்மி 10ஏ மற்றும் ரெட்மி 10சி மாடல்களில் 50 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன் மாடல்கள் பற்றி சியோமி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இரு மாடல்களும் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரெட்மி 9ஏ மற்றும் ரெட்மி 9சி மாடல்களின் மேம்பட்ட வேரியண்ட்கள் ஆகும்.

யாழ் .கொடிகாமத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு – கடத்தல்காரர் தப்பியோட்டம்!

யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் கடத்தியோர் எனச் சந்தேகிக்கப்படும் குழுவினர் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனையடுத்து மணல் கடத்தல் குழுவினர் அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சம்பவ இடத்தை முற்றுகையிட்ட இராணுவத்தினர் கடத்தல்காரர்களை கைது முற்பட்ட நிலையில் அவர்கள் ஓடியுள்ளனர்.

இதனையடுத்து இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகின்றது. சம்பவத்தையடுத்து உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டார்.

மேலும் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரமும் அதன் சாரதியும் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பரிதாபமான முறையில் உயிரிழந்த 17மற்றும் 18வயதுடைய இரு மாணவர்கள்

0

நேற்று ( திங்கட் கிழமை ) பிற்பகல் ரத்தோட்டை, சுது கங்கையில் ஜமன்வத்தை பகுதியில் நீராட சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இரண்டு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், ரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சாவகச்சேரி இந்து மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள புகையிரத பாதையில் புகையிரதத்துடன் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொடிகாமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய உதய குமார் பானுஷன் என்ற உயர்தர மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரபல தேசிய பாடசாலையில் ஐந்து மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!!

0

கண்டி – கெங்கல்ல தேசிய பாடசாலையில் கொரோனா தொற்று கண்டறியபட்ட நிலையில், பாடசாலையின் தரம் 08 மற்றும் 10 ஆம் வகுப்புகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டும் என்று சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாடசாலையில் பனியாட்றிய ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருப்பதை உறுதி செய்ய பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தினால் ஆன்டிஜென் மற்றும் PCR பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் இன்று விடுதலை!

0

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் இலங்கை கடற்பரப்பில் கைதான 55 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த வருடம் டிசம்பரில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 55 பேருக்கான ஆறு மாதகால சாதாரண சிறை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவர்களது கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 5 வருட காலத்தில் மீண்டும் இலங்கை பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்வதற்கும் நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.

ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்த வழக்கு எடுக்கப்பட்ட நிலையில் இந்திய மீனவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.

இலங்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்

0

இலங்கையில் கடந்த பருவத்தில் நெல் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40 பில்லியன் ரூபாவை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்று முதல் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை ஊடாக ஒரு கிலோ நெல் தலா 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.