பிந்திய செய்திகள்

லண்டனில் குற்றவாளியான தமிழர் ஒருவர்

இலங்கை தமிழர் ஒருவர் , திருட்டு குற்றச்சாட்டு தொடர்பில் லண்டனில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Best One store என்ற கடையில் திருடியதாக இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. செயின்ட் ஹெலன்ஸ், சார்லஸ் வீதியை சேர்ந்தவர் மீதே இவ்வாறு குற்றச்சாட்டுகள் உறுதியாகியுள்ளது.

சந்தேகநபர் கடந்த 11ஆம் திகதி செயின்ட் ஹெலன்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். திருடப்பட்ட பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் தான் குற்றமற்றவர் என இதற்கு முன்னர் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளில் அவர் கூறியிருந்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் அதே ஆண்டு ஏப்ரல் வரையான காலப்பகுதியில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக் கூறப்படுகின்றது. சார்லஸ் வீதியில் உள்ள Best One storeஇல் திருடிய மதுபான போத்தல்களை வேறு இடங்களில் அவர் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts