பிந்திய செய்திகள்

அமெரிக்க பொருளாதார நிபுணர் இலங்கைக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையின் தற்போதைய நிலவரப்படி வங்குரோந்து நிலையை அடைந்துள்ளதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆகவே அடுத்து வரும் நாட்கள் மிகவும் மோசமானதாக இருக்கும் எனவும் அமெரிக்க பொருளாதார நிபுணரான பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே எச்சரித்துள்ளார்.

ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான ஹென்கே இலங்கை ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உயர் பணவீக்கத்தினால் நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பணவீக்கம் 21.5 சதவீதம் என்ற போதிலும், அவரது அளவீடுகளின்படி உண்மையான பணவீக்கம் 132 சதவீதம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்மைய, அதிகாரப்பூர்வ பணவீக்க விகிதத்தை விட உண்மையான பணவீக்க விகிதம் 6 மடங்கு அதிகமாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய உயர் பணவீக்கம் ஒரு பொருளாதாரப் பேரழிவு எனவும் இதனால் பணக்காரர்களை விட ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவது தான் இங்கு உண்மையான பிரச்சினை எனவும் பேராசிரியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இறுதியில் அரசியல் பிரச்சினையே உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts