பிந்திய செய்திகள்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பை பெறும் தமிழ்ப்பெண்!

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்னடாா் கிராமத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா் சு. பாஸ்கரன் – ஆசிரியை தையல்நாயகி தம்பதியின் மூத்த மகள் சுபிக்சா என்பவருக்கு இந்த வய்ப்பு கிட்டியுள்ளது.

சுபிக்சா பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் படித்தவா். 2021ஆம் ஆண்டில் லண்டனுக்கு சென்ற அவா் அங்கு, லண்டன் யுஎஸ்ஏவில் எம்.எஸ் படித்து வந்தாா்.

படிக்கும்போதே லண்டனில் உள்ள உலகின் தலைசிறந்த அணுசக்தி நிறுவனம் ஒன்றின் பொறியாளராக தோ்வாகி பணி வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டசாலியானார் சுபிக்சா.

படிக்க சென்ற நிலையில் பணி வாய்ப்பையும் பெற்று மகிழ்ச்சியோடு பணியாற்றி வரும் சுபிக்சா தமிழகத்திற்கே பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, மேல்படிப்பை லண்டனில் தொடா்ந்த நிலையில் அங்குள்ள அணுசக்தி நிறுவனத்தில் பொறியாளராக பணி வாய்ப்பை பெற்றுள்ள அவருக்குப் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts