ரஷ்யா உக்ரைன் தாக்குதல் 14ஆவது நாளாக கடுமையான மோதல் இடம்பெற்று வருகின்ற வேளை 61 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் லியாஷ்கோ தெரிவித்துள்ளார்.
இந்தப் போரில் ரஷ்ய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பணிகள் தொடர்வதாகவும், படையெடுப்பாளர்கள் ஜெனிவா உடன்படிக்கையை மீறுவது தொடர்பிலும் உலக சுகாதார நிறுவனத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் லியாஷ்கோ மேலும் தெரிவித்துள்ளார்.













































