பிந்திய செய்திகள்

இடது கண் துடித்தால் யாருக்கு லாபம்

அப்படி ஒரு சில விஷயங்களில் பூனை குறுக்கே போனால் நல்லதல்ல, இடது கண் துடித்தால் நல்லதல்ல போன்ற விஷயங்கள் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகிறது.

அப்படி, இடது கண் துடித்தால் என்னவாகும் என்பதைப் பற்றி புராணங்களில் இருந்து சில சான்றுகளை எடுத்து நாம் இன்று பார்ப்போம்

இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்பதை ராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது.

அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப் பிடித்தபடியே, புதுமணத் தம்பதிகள் போல அக்னியை வலம் வந்தனர்.

“ராமா! நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல், சுகமோ கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது,” என்றான் சுக்ரீவன். ராமனும் அந்த வார்த்தைகளை அங்கீகரித்தார். அந்த சமயத்தில், எங்கோ இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது.

ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதை. பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது.

வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. ஆண்களுக்கு இது கெடுபலனை உண்டாக்கும். அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே உருவாகி விட்டது.

பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடதுகண் துடித்தால், அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts