பிந்திய செய்திகள்

உங்கள் வீட்டில் இந்த செடி இருக்கா முதலில் இதை செய்யுங்கள்

ஒரு குடும்பத்தில் நாலைந்து பேர் இருந்தால் அதில் எல்லோருமே மன நிம்மதியுடன் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. யாருக்காவது மன உளைச்சல் பிரச்சனை நிச்சயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்தச் செடி உங்கள் வீட்டில் இருந்தால் மன உளைச்சலில் இருந்து மீள முடியாத துயரத்தில் யாராவது ஒருவர் நிச்சயமாக இருப்பார்கள் என்று உறுதியாகக் கூறலாம்.

குடும்பத்தில் இருக்கும் குழப்பங்களுக்கு பெரும்பாலும் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் காரணமாக இருக்கிறது. வீட்டை எப்போதும் சுத்த பத்தத்துடன், நறுமணமாக வைத்துக் கொண்டால் நிச்சயம் வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீண்ட காலம் தாங்க முடியாது. அதனால் தான் முந்தைய காலங்களில் எல்லாம் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளக்கை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சொன்னார்கள்.

ஆனால் பெரும்பாலும் இப்போது வாரம் ஒருமுறை செய்வதற்கு கூட நேரம் இல்லாத சூழ்நிலையில் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களின் ஆதிக்கம் பெறத் துவங்கி உள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை ,சச்சரவுகளும், மனநிம்மதி இல்லாமல் பிரிவுகளும் ஏற்படுகிறது. இந்த பிரிவுகள் ஏற்படாமலிருக்க கட்டாயம் இறைவழிபாடு அவசியம்.

எதிர்மறை ஆற்றல் பெருகுவதற்கு இறைவழிபாடு குறைவது மட்டும் காரணம் அல்ல, நம் வீட்டில் இருக்கும் சிறு சிறு விஷயங்கள் கூட அதற்கு காரணமாக அமையும். அந்த வகையில் உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் வீட்டில் இரவு நேரங்களில் ஈரமான துணிகளை வைத்திருப்பது, கதவு, ஜன்னல் போன்றவற்றில் சத்தம் வருவது, இரும்பு பொருட்கள் அதிகம் சேர்ப்பது, பேச்சில் நல்ல வார்த்தைகளை பிரயோகிக்காமல் இருப்பது போன்றவையும் அடங்கும்.

கெட்ட வார்த்தைகளைப் பேசும் இல்லத்தில் நிச்சயம் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும், எனவே வார்த்தைகளில் இனிமை தேவை. அது மட்டுமல்லாமல் வீட்டை சுற்றிலும் நாம் வளர்க்கக்கூடிய செடிகள் பசுமையாக இருக்க வேண்டும். வாடிய செடி அல்லது முட்கள் நிறைந்த செடி போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ரோஜா செடியிலும் முட்கள் இருக்கத்தானே செய்கிறது? அதையும் தவிர்த்து விட வேண்டுமா? என்றால் இல்லை, முழுமையாக முட்கள் இருக்கும் கள்ளிச் செடி போன்ற அமைப்பில் இருக்கும் குரோட்டன்ஸ் செடிகளை அகற்றி விட வேண்டும். அது மட்டுமல்லாமல் வீட்டின் சுவர்களில் முளைத்திருக்கும் சிறு சிறு செடிகள் கூட குடும்பத்தில் எதிர்மறை ஆற்றல் உண்டு பண்ணும்.

எனவே வீட்டை சுற்றிலும் சுவர்களில் எங்காவது செடிகள் வளர்ந்து இருக்கிறதா? என்பதைப் பார்த்து அதனை அகற்றி விட வேண்டும். அதுமட்டுமல்லாமல் வீட்டின் பின்புறத்தில் காய்ந்து போன செடிகள் இருக்கக் கூடாது. காய்ந்து போன வாடியிருக்கும் செடிகள் இருக்கும் இல்லத்தில் இது போல பிரச்சனைகளும், சந்தேகங்களும், சண்டை, சச்சரவுகளும் அதிகரிக்கும். எனவே வீட்டை சுற்றிலும் இருக்கும் வாடிய செடிகளை வேரோடு அகற்றி ஓடும் நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும். நீங்கள் வளர்க்கும் வீட்டு செடிகளை கூட எப்போதும் வாடி விடாமல் பூத்துக் குலுங்குமாறு பாதுகாத்து வளர்க்க வேண்டும். செடிகள் பசுமையாக செழிக்க வளரும் பொழுது உங்கள் இல்லத்திலும், எண்ணத்திலும் பசுமை மேலோங்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts